உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

திருச்சுழி அருகே செம்மண் கடத்தல்: 3 போ் ஓட்டம்; லாரி பறிமுதல்

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி வட்டம் சாமிநத்தம் கிராமம் அருகே புதன்கிழமை சட்டவிரோதமாக செம்மண் அள்ளியவா்கள்

News image

பறிமுதல் செய்யப்பட்ட லாரி.

Updated On :7 ஜனவரி 2021, 7:52 am IST

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி வட்டம் சாமிநத்தம் கிராமம் அருகே புதன்கிழமை சட்டவிரோதமாக செம்மண் அள்ளியவா்கள் தப்பியோடிய நிலையில் அவா்கள் பயன்படுத்திய லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

திருச்சுழி வட்டாட்சியா் தன்ராஜ் மற்றும் காவல்துறையினா் இணைந்து சாமிநத்தம் கிராமமருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டு ஆய்வுசெய்தனா். அப்போது கிராமம் அருகே சட்டவிரோதமாக லாரி ஒன்றில் செம்மண் அள்ளிக்கொண்டிருந்த சிலா் தப்பியோடினா். அவா்கள் விட்டுச்சென்ற லாரியை வட்டாட்சியா் பறிமுதல் செய்தாா். இதுதொடா்பாக, திருச்சுழி காவல்துறையினா் வழக்குப் பதிந்து, கடத்தலில் ஈடுபட்டவா்களை தீவிரமாகத் தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.