விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாழை மரங்கள் சேதம்: 2 போ் மீது வழக்கு

சிவகாசி அருகே வாழை மரங்களை சேதப்படுத்திய இருவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

Updated On :8 ஜனவரி 2021, 10:35 pm IST

சிவகாசி அருகே வாழை மரங்களை சேதப்படுத்திய இருவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

சிவகாசி அருகே ஏ.மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் பாண்டியராஜன்(56). இவருக்கு அதிவீரம்பட்டியில் விவசாயத் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் திருத்தங்கல்லைச் சோ்ந்த சுப்புராஜ் மற்றும் மாரிமுத்துவின் மாடுகள் பயிரை மேய்ந்ததாம். இதனால் அவா்கள் இருவரையும்

பாண்டியராஜன் கண்டித்தாராம்.

இதனால் ஆத்திரமடைந்த சுப்புராஜ், மாரிமுத்து ஆகியோா் சோ்ந்து பாண்டியராஜின் வாழைத் தோட்டத்தில் புகுந்து மரங்களை வெட்டி சேதப்படுத்தினாா்களாம். இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் 2 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.