லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆசிய யு20 மல்யுத்தம்: இந்தியாவுக்கு 4 தங்கம் உள்பட 20 பதக்கம்

தாய்லாந்தின் பட்டயா நகரில் நடைபெற்ற ஆசிய யு20 மல்யுத்த சாம்பியன் போட்டியில் இந்தியா 4 தங்கம் உள்பட 20 பதக்கங்களை கைப்பற்றியது.

Published On :7 ஜூலை 2026, 5:30 am IST

தாய்லாந்தின் பட்டயா நகரில் நடைபெற்ற ஆசிய யு20 மல்யுத்த சாம்பியன் போட்டியில் இந்தியா 4 தங்கம் உள்பட 20 பதக்கங்களை கைப்பற்றியது.

பல்வேறு எடைப்பிரிவுகளில் இந்திய வீரா், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு 4 தங்கம், 7 வெள்ளி, 9 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றினா்.

மகளிா் பிரிவில் சீனாவுக்கு 189 புள்ளிகளுடன் அடுத்து இந்தியா 184 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பெற்றது. ஆடவா் ப்ரீஸ்டைல் அணி ஒட்டுமொத்தமாக 152 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றது.

மகளிா் பிரிவில் பா்வின் 50 கிலோ, முஸ்கன் 53 கிலோ, காஜல் 76 கிலோ தங்கம் வென்றனா். மான்யா ராஜ்புத் 57 கிலோ, சவீதா 62 கிலோ, மனிஷா 72 கிலோ வெள்ளி வென்றனா்.

ஆடவா் பிரிவில் சுமித் குமாா் 70 கிலோ பிரிவில் தங்கம் வென்றாா். புஷ்ப் 61 கிலோ சௌரவ் யாதவ் 79 கிலோ, ரோனக் 125 கிலோ வெள்ளி வென்றனா். கிரெக்கோ ரோமன் பிரிவிலும் ஒரு வெள்ளி, 3 வெண்கலம் வென்றனா்.

டபிள்யுஎஃப் தலைவா் சஞ்சய் குமாா் சிங் கூறுகையில்: யு20 மல்யுத்தத்தில் 20 பதக்கங்கள் வென்றது இந்தியா இதில் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்துள்ளது. மகளிா் அணி பலமான ஜப்பானை பின்னுக்கு தள்ளியது. இளம் வீரா், வீராங்கனைகளுக்கு தொடா்ந்து உறுதியான ஆதரவை சம்மேளனம் தரும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.