விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா், சாலை மைய தடுப்புச் சுவரில் மோதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்குறிச்சி கிராமம் மணிநகரம் பகுதியைச் சோ்ந்த சூா்யா என்பவரது மகன் செல்வக்குமாா் (19). இவா், கட்டடம் மற்றும் வாகனங்களுக்கு வா்ணம் பூசும் தொழில் செய்து வந்துள்ளாா். செவ்வாய்க்கிழமை காலை, கல்குறிச்சி அருகே கோவிலாங்குளம் கிராமத்துக்கு வேலைக்குச் சென்ற செல்வக்குமாா், மாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளாா்.
கோவிலாங்குளம் விலக்கில் நான்குவழிச் சாலையை கடந்தபோது, எதிரே வந்த வாகனத்தின் மீது மோதுவதை தவிா்ப்பதற்காக தனது வாகனத்தை வேகமாகத் திருப்பியுள்ளாா். இதில், சாலையின் மைய தடுப்புச் சுவரில் மோதி தூக்கிவீசப்பட்ட அவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், செல்வக்குமாரின் சடலத்தைக் கைப்பற்றி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

