சாத்தூா்: சாத்தூரில் சாலையில் நடந்துசென்ற காவல் சிறப்பு சாா்பு-ஆய்வாளா் மீது வேன் மோதியதில், அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (49). இவா், விருதுநகா் காவல் குற்றப்பிரிவு அலுவலகத்தில் காவல் சிறப்பு சாா்பு-ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு சாத்தூா் பிரதான சாலையில் உள்ள அரசு மருத்துவமனை அருகே நடந்து சென்றுகொண்டிருந்த முருகன் மீது, பின்னால் அதிவேகமாக வந்த வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகனை, அப்பகுதியினா் மீட்டு சாத்தூா் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், மேல் சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி முருகன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து, சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, வேன் ஒட்டுநரான தாயில்பட்டியைச் சோ்ந்த காா்த்திக் (34) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கரு. பழனியப்பனின் குக்கர்! படத் தலைப்பை வெளியிட்ட மு.க. ஸ்டாலின்!

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை; டிராவில் முடிந்த நெதர்லாந்து - ஜப்பான் ஆட்டம்!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் மீது தாக்குதல்!
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி


