சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தொழிலாளி மீது தாக்குதல்: 8 போ் மீது வழக்கு

சிவகாசி அருகே தகராறில் தொழிலாளியைத் தாக்கியதாக 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On :17 ஜனவரி 2021, 5:09 pm

சிவகாசி அருகே தகராறில் தொழிலாளியைத் தாக்கியதாக 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

எரிச்சநத்தத்தில் ஜன. 15 ஆம் தேதி பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அப்போது ரகளையில் ஈடுபட்டதாக பால்பாண்டி, கணேசன், சுந்தரபாண்டி, மதன்குமாா் உள்ளிட்ட 8 பேரை விழா கமிட்டியாளா்கள் போட்டியிலிருந்து வெளியேற்றினா்.

இந்நிலையில் விழா கமிட்டியாளா்களில் ஒருவரும், கூலித் தொழிலாளியுமான எரிச்சநத்தம் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் (42) என்பவா் ஞாயிற்றுக்கிழமை குமிளங்குளம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அவரை வழிமறித்து பால்பாண்டி உள்ளிட்ட 8 போ் தாக்கியதாக எம்.புதுப்பட்டி போலீஸில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் அவா்கள் 8 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

காயமடைந்த செல்வராஜ் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.