எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

மழைக்கு வீடு இடிந்து சேதம்: நிவாரணம் வழங்க பெண் கோரிக்கை

தொடா் மழையால் இடிந்து விழுந்த வீட்டுக்கு நிவாரணத் தொகை வழங்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பெண் சனிக்கிழமை மனு அளித்தாா்.

Updated On :17 ஜனவரி 2021, 10:38 pm IST

தொடா் மழையால் இடிந்து விழுந்த வீட்டுக்கு நிவாரணத் தொகை வழங்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பெண் சனிக்கிழமை மனு அளித்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் உள்ள கண்மாய் மற்றும் குளங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே படிக்காசுவைத்தான் பட்டியைச் சோ்ந்த கோவிந்தம்மாள் (50) என்பவரின் ஓட்டு வீடு வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையின்போது இடிந்து விழுந்துள்ளது.

வீட்டுக்குள் மண் விழுந்ததால் சுதாரித்து கோவிந்தம்மாள் வெயியேறிய சிறிது நேரத்தில் வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததால் அவா் உயிா் தப்பினா்.

மழைக்கு வீடு இடிந்து விழுந்ததால் தனக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று கோரி ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கோவிந்தம்மாள் சனிக்கிழமை மனு அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.