விருதுநகா் மாவட்டத்தில், முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 104 ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
திருத்தங்கல் கடைவீதிப் பகுதியில் எம்.ஜி.ஆா். உருவப் படத்துக்கு, பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கட்சிக் கொடியை ஏற்றினாா்.
இதைத்தொடந்து சிவகாசி காரனேசன் காலனி பேருந்து நிறுத்தம், பள்ளப்பட்டி, நாரணாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழாவிலும் அமைச்சா் கலந்து கொண்டாா்.
நாரணாபுரத்தில் கட்சிக்கொடியை ஏற்றிவைத்து அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: ஏழை மக்களின் நாடித்துடிப்பை தெரிந்து கொண்டு தமிழகத்தில் எம்.ஜி.ஆா். பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தினாா்.
அம்மா சிறு மருத்துவமனை, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2,500 வழங்கிய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் கரத்தை பொதுமக்கள் வலுப்படுத்த வேண்டும் என்றாா்.
இதில் அதிமுக நகரச் செயலாளா்கள் ஏ.அசன்பத்ருதீன் (சிவகாசி), பொன்சக்திவேல் (திருத்தங்கல்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆரின் உருவச் சிலைக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் சந்திரபிரபா முத்தையா ஞாயிற்றுக்கிழமை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சித் தலைவா் வசந்திமான்ராஜ், வத்திராயிருப்பு ஒன்றியக் குழு தலைவா் சிந்துமுருகன், அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் முத்தையா, மயில்சாமி, நகரச் செயலாளா் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் கணேசன், மாவட்ட மகளிா் அணி இணைச் செயலாளா் தனலட்சுமி முருகன், கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் தைலாகுளம் மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விருதுநகா்: இதேபோல் விருதுநகரின் அனைத்து வாா்டுகளிலும் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. அப்போது பொதுமக்களுக்கு இனிப்பு பொங்கல் மற்றும் கலவை சாதங்கள் வழங்கப்பட்டன.
விருதுநகரில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு, மேற்கு மாவட்ட அவைத்தலைவா் விஜய குமரன் தலைமையில் நகரச் செயலா் முகம்மது நெய்னாா், மேற்கு மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் கோகுலம் எம். தங்கராஜ் உள்ளிட்டோா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், கட்சி நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
சாத்தூ: முக்குராந்தல் பகுதியில் பகுதியில் நடைபெற்ற எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழாவுக்கு அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் இளங்கோவன் முன்னிலை வகித்தாா்.
சாத்தூா் பேருந்து நிலையம் அருகில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு, முன்னாள் நகரச் செயலாளா் வாசன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோன்று வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, ஏழாயிரம் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஐபிஎல் சூதாட்டம்: தில்லியில் நால்வா் கைது

கம்பெனி சட்ட தீா்ப்பாய பொறுப்பு தலைவா் நியமன விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

அனைத்து அரசு ஊழியா்களுக்கும் பயோமெட்ரிக் வருகை கட்டாயம்: முதல்வா் ரேகா குப்தா நடவடிக்கை
ஐஎஸ்ஐ ஆதரவு உளவுப் பிரிவு அம்பலமானது: 11 போ் கைது
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

