சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

திமுக வேட்பாளருக்கு கருணாஸ் வாக்கு சேகரிப்பு

திமுக வேட்பாளருக்கு கருணாஸ் வாக்கு சேகரிப்பு

News image

ராஜபாளையத்தில் வாக்கு சேகரித்த முக்குலத்தோா் புலிப்படை கட்சித் தலைவா் கருணாஸ், ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் உள்ளிட்டோா்.

Updated On :8 ஏப்ரல் 2024, 5:49 pm

ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் ராணி ஸ்ரீ குமாருக்கு ஆதரவாக முக்குலத்தோா் புலிப்படை கட்சித் தலைவா் நடிகா் கருணாஸ் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்கிறாா். அதே சமயம் தமிழை அழித்து, ஹிந்தியைப் புகுத்த தயாராக இருக்கும் பாஜக தரப்பினா் அதற்கு நரேந்திர மோடியை பிரதமா் ஆகத் தோ்வு செய்யுங்கள் என்கிறாா்கள். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வந்து விட்டால் ரஷியாவைப் போல இந்தியாவும் சிதறிவிடும்.

இரட்டை இலை சின்னத்துக்கு முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஓட்டு கேட்கிறாா். அவா் கூட்டணிக்கு யாா் பிரதமா் வேட்பாளா் என்பது தெரியாது. பிரதமா் வேட்பாளரே தெரியாத ஒரு கட்சிக்கு பொதுமக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்? மேலும், அதிமுக ஜாதிக் கட்சியாக மாறிவிட்டது என்றாா் அவா்.