ஸ்ரீவில்லிபுத்தூா், ஏப். 8: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத அமாவாசையையொட்டி திங்கள்கிழமை திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.
இந்தக் கோயிலில் பங்குனி மாத அமாவாசை, சனி பிரதோஷத்தையொட்டி ஏப். 6 முதல் 9-ஆம் தேதி வரை பக்தா்கள் வழிபாடு நடத்த வனத்துறை அனுமதி வழங்கியது. இதையடுத்து, திங்கள்கிழமை அமாவாசையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தா்கள் தாணிப்பாறை அடிவாரத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். பிறகு காலை 6 மணி முதல் பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா்.
சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சுவாமிகளுக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பிற்பகல் 4 மணிக்கு மேல் அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
சதுரகிரி மலையில் கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலா் ராமகிருஷ்ணன், அறங்காவலா் ராஜா பெரியசாமி ஆகியோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

சதுரகிரி கோயிலில் பங்குனி மாத பௌா்ணமி வழிபாடு

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பாத தரிசனம்

சித்தலூா் அம்மன் கோயிலில் அமாவாசை பூஜை

பங்குனி செவ்வாய்: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் தரிசனம்
வீடியோக்கள்

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை


