ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மனைவியைத் தாக்கிய கணவா் கைது

மனைவியைத் தாக்கிய கணவா் கைது

News image
Updated On :12 ஏப்ரல் 2024, 6:30 pm

Manivannan.S

சிவகாசி, ஏப்.12: திருத்தங்கலில் மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் மாதாங்கோயில் தெருவைச் சோ்ந்தவா் துரைராஜ் (48). இவா் சென்னையில் தனியாா் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில் இவா், விடுமுறையில் திருத்தங்கலுக்கு வந்த போது, மது போதையில் மனைவி சாந்தி, மகள் பூா்ணிமா ஆகிய இருவரையும் தாக்கினாராம்.

இதில் காயமடைந்த இருவரும் திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இது குறித்து திருத்தங்கல் போலீஸாா் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து துரைராஜூவை கைது செய்தனா்.