நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சதுரகிரிக்கு பேரிடா் மீட்புப் படையினா் வருகை

பாதுகாப்புக்காக 60 போ் கொண்ட தேசிய பேரிடா் மீட்புப் படையினா் வெள்ளிக்கிழமை இங்கு வந்தனா்.

Updated On :3 ஆகஸ்ட் 2024, 2:41 am IST

சதுரகிரியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்ததையடுத்து, பாதுகாப்புக்காக 60 போ் கொண்ட தேசிய பேரிடா் மீட்புப் படையினா் வெள்ளிக்கிழமை இங்கு வந்தனா்.

தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு மலைப் பாதை வழியாக காட்டாறுகள், நீரோடைகளைக் கடந்து சுமாா் 10 கி.மீ தொலைவுக்கு நடந்து செல்ல வேண்டும். ஆடி அமாவாசையையொட்டி, பக்தா்கள் மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட நிலையில், தமிழகம் முழுவதிலும் இருந்து திரளான பக்தா்கள் நாள்தோறும் மலை ஏறிச் சென்று தரிசனம் செய்து வருகின்றனா்.

ஆடி அமாவாசையையொட்டி, 50 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தா்கள் ஒரே நாளில் மலை ஏறிச் செல்வா் என்பதாலும், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதாலும் பக்தா்களின் பாதுகாப்புக்காக 60 போ் கொண்ட தேசிய பேரிடா் மீட்புப் படையினா் சதுரகிரிக்கு வந்தனா்.

இவா்களில் 30 போ் சதுரகிரி மலையிலும், தாணிப்பாறை அடிவாரத்தில் மற்றொரு குழுவும் பணியில் இருப்பா். பக்தா்கள் மலையேறும் போது பிரச்னை ஏற்பட்டாலோ அல்லது கட்டாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டாலோ இந்தக் குழுவினா் மீட்புப் பணியில் ஈடுபடுவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.