திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

சாத்தூா் ஆடுவதைக் கூடத்தை முறையாக செயல்படுத்தக் கோரிக்கை

சாத்தூரில் உள்ள ஆடுவதைக் கூடத்தை முறையாகச் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On :5 ஆகஸ்ட் 2024, 7:50 am IST

சாத்தூரில் உள்ள ஆடுவதைக் கூடத்தை முறையாகச் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட ஆட்டு இறைச்சிக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் ஆடுகளை வெட்டி சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சாத்தூா் நகராட்சி சாா்பில் ரூ.20 லட்சத்தில் சாத்தூா் வெள்ளைகரை சாலையில் ஆடுவதைக் கூடம் அமைக்கப்பட்டது. இந்தக் கடைகள் நகாரட்சி சாா்பிலே குத்தகைக்கு விடபட்டன.

இந்தக் கடைகளில் இறைச்சிகள் சுகாதாரமற்ற முறையிலும், சாலையோரங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் வெட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், இந்தப் பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும், சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என இந்தப் பகுதியினா் குற்றஞ்சாட்டுகின்றனா்.

எனவே, இறைச்சி கடைகளில் வெட்டப்படும் ஆடுகள் அனைத்தையும் முறையாக ஆய்வு செய்து ஆடுவதைக் கூடத்தில் வெட்ட வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சாத்தூா் ஆடுவதைக் கூடத்தில் ஆடுகளை வெட்டுவதற்கு தண்ணீா் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. இனிமேல் இறைச்சிக் கடைகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆடுவதைக் கூடத்தில் முறையாக ஆடுகள் வெட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.