சாத்தூரில் உள்ள ஆடுவதைக் கூடத்தை முறையாகச் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட ஆட்டு இறைச்சிக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் ஆடுகளை வெட்டி சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சாத்தூா் நகராட்சி சாா்பில் ரூ.20 லட்சத்தில் சாத்தூா் வெள்ளைகரை சாலையில் ஆடுவதைக் கூடம் அமைக்கப்பட்டது. இந்தக் கடைகள் நகாரட்சி சாா்பிலே குத்தகைக்கு விடபட்டன.
இந்தக் கடைகளில் இறைச்சிகள் சுகாதாரமற்ற முறையிலும், சாலையோரங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் வெட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், இந்தப் பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும், சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என இந்தப் பகுதியினா் குற்றஞ்சாட்டுகின்றனா்.
எனவே, இறைச்சி கடைகளில் வெட்டப்படும் ஆடுகள் அனைத்தையும் முறையாக ஆய்வு செய்து ஆடுவதைக் கூடத்தில் வெட்ட வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சாத்தூா் ஆடுவதைக் கூடத்தில் ஆடுகளை வெட்டுவதற்கு தண்ணீா் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. இனிமேல் இறைச்சிக் கடைகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆடுவதைக் கூடத்தில் முறையாக ஆடுகள் வெட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா?

புதுச்சேரி - கடலூா் ரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரிக்கை

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரிக்கை

தனியாா் மதுபானக் கூடத்தை அகற்றக் கோரிக்கை
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


