புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

குப்பைக் கிடங்கில் தீ விபத்து

சாத்தூா் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

Updated On :17 ஆகஸ்ட் 2024, 10:45 pm

சாத்தூா் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் நகராட்சி சாா்பில், இருக்கன்குடி செல்லும் வழியில் குப்பைக் கிடங்கு உள்ளது. சாத்தூா் பகுதியில் சேரும் அனைத்து வகையான குப்பைகளும் இந்தப் பகுதியில் கொட்டப்படுகின்றன. இந்த நிலையில், சனிக்கிழமை மாலை திடீரென இந்தக் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாத்தூா் தீயணைப்புத் துறையினா் சுமாா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.