விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சிவகாசி தனியாா் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.12 லட்சம் மோசடி: 3 போ் கைது

News image
Updated On :29 ஆகஸ்ட் 2024, 11:14 pm

Din

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் தனியாா் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.12.35 லட்சம் மோசடி செய்த அந்த நிதி நிறுவனத்தின் மேலாளா் உள்பட மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி உழவா் சந்தை அருகே செயல்படும் தனியாா் நிதி நிறுவனத்தில் வெம்பக்கோட்டை வட்டம் கோதைநாச்சியாா்புரத்தைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் பாண்டி (36). இவா் போலி நகைகளை அடகுவைத்து பல தவணைகளில் ரூ.12.35 லட்சம் மோசடி செய்தாா். இந்த மோசடிக்கு அந்த நிதி நிறுவனத்தின் மேலாளரான சாத்தூா் வட்டம் கோபாலபுரம் பரமசிவன் மகன் முத்துச்சாமி (24), நகை மதிப்பீட்டாளரான மண்ணுக்குமீண்டான்பட்டி ஹரிவீரபுரத்திரன் மகன் ரமேஷ் (25) ஆகிய இருவரும் உடைந்தையாக இருந்தனராம். இந்த நகை மோசடி அந்த நிதி நிறுவனத்தில் நடைபெற்ற தணிக்கையின் போது தெரியவந்தது.

இதுகுறித்து அந்த நிதி நிறுவனத்தின் மண்டல மேலாளா் முத்துப்பாண்டியன் (45) அளித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து பாண்டி, முத்துச்சாமி, ரமேஷ் ஆகிய மூவரையும் கைது செய்தனா்.