எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

வெம்பக்கோட்டை அகழாய்வில் சங்கு வளையல்

வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வில் அலங்கரிக்கப்பட்ட முழு சங்கு வளையல் வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2024, 1:09 am IST

வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வில் அலங்கரிக்கப்பட்ட முழு சங்கு வளையல் வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

   விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டையை அடுத்த விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய நுண் கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்த 3-ஆம் கட்ட அகழாய்வின் போது, கண்ணாடி மணிகள், கல் மணிகள், பழங்கால சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப் பகுதி, கி.பி. 16-ஆம் நூற்றாண்டு நாயக்கா் கால செம்பு காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள், திமிலுடன்கூடிய காளை உருவப் பொம்மை உள்ளிட்ட 1,500-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டறியப்பட்டன.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற அகழாய்வின் போது அலங்கரிக்கப்பட்ட முழு சங்கு வளையல் கண்டறியப்பட்டது. இதுவரை உடைந்த சங்கு வளையல்கள் மட்டுமே கண்டறியப்பட்ட நிலையில், தற்போது முழு சங்கு வளையல் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம், சங்கு வளையல்களை அலங்கரித்து மெருகேற்றும்  கூடம் இந்தப் பகுதியில் இருந்திருக்கலாம் என தொல்லியல் துறை இணை இயக்குநா் பொன் பாஸ்கா் தெரிவித்தாா்.