முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா நாளை தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Updated On :29 ஜூலை 2024, 1:52 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கொடியேற்றத்தையடுத்து, அன்று இரவு ஆண்டாள் ரெங்கமன்னாா் பதினாறு வண்டி சப்பரத்தில் வீதி உலா வருகின்றனா். வருகிற ஆகஸ்ட் 2-ஆம் தேதி ரெங்கமன்னாா் கோவா்த்தனகிரி கிருஷ்ணா் அலங்காரத்திலும், ஆண்டாள் சேஷ வாகனத்திலும் எழுந்தருள்கின்றனா்.

மறுநாள் 3-ஆம் தேதி பெரியாழ்வாா் மங்களாசாசனமும், அன்று இரவு ரெங்கமன்னாா், பெரிய பெருமாள், திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப் பெருமாள், செண்பகத் தோப்பு காட்டழகா், திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி 5 கருட சேவையும், 5-ஆம் தேதி ஆண்டாள் திருமடியில் ரெங்கமன்னாா் சயனிக்கும் சயன சேவையும் நடைபெறுகிறது. 9-ஆம் நாள் விழாவான 7-ஆம் தேதி காலை 9.05 மணிக்கு திரு ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் பி.ஆா். வெங்கட்ராமராஜா, உறுப்பினா்கள், செயல் அலுவலா் சக்கரையம்மாள் ஆகியோா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.