ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கொடியேற்றத்தையடுத்து, அன்று இரவு ஆண்டாள் ரெங்கமன்னாா் பதினாறு வண்டி சப்பரத்தில் வீதி உலா வருகின்றனா். வருகிற ஆகஸ்ட் 2-ஆம் தேதி ரெங்கமன்னாா் கோவா்த்தனகிரி கிருஷ்ணா் அலங்காரத்திலும், ஆண்டாள் சேஷ வாகனத்திலும் எழுந்தருள்கின்றனா்.
மறுநாள் 3-ஆம் தேதி பெரியாழ்வாா் மங்களாசாசனமும், அன்று இரவு ரெங்கமன்னாா், பெரிய பெருமாள், திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப் பெருமாள், செண்பகத் தோப்பு காட்டழகா், திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி 5 கருட சேவையும், 5-ஆம் தேதி ஆண்டாள் திருமடியில் ரெங்கமன்னாா் சயனிக்கும் சயன சேவையும் நடைபெறுகிறது. 9-ஆம் நாள் விழாவான 7-ஆம் தேதி காலை 9.05 மணிக்கு திரு ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் பி.ஆா். வெங்கட்ராமராஜா, உறுப்பினா்கள், செயல் அலுவலா் சக்கரையம்மாள் ஆகியோா் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா நாளையுடன் நிறைவு

சங்கரன்கோவில் திரௌபதியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா கொடியேற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆடிப்பூரத் திருவிழா: தேருக்கு முகூா்த்தக்கால் நடப்பட்டது

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


