வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மாமனாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு

News image
Updated On :14 டிசம்பர் 2025, 8:02 pm

தினமணி செய்திச் சேவை

சாத்தூா் அருகே மாமனாரைத் தாக்கிய மருமகன் மீது அப்பையநாயக்கன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள சாமியாா் குடியிருப்பைச் சோ்ந்தவா் சுப்பையாசாமி (75). இவரது மகள் ராதிகாவை சிவந்திபட்டியில் உள்ள ராஜசேகரன் என்பவருக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளாா்.

இந்த நிலையில், குடும்பத் தகராறு காரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்பு ராதிகா தனது தந்தை சுப்பையாசாமியுடன் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை குண்டலகுத்தூா் பேருந்து நிறுத்தத்தில் நின்ற சுப்பையாசாமியை, அங்கு வந்த ராஜசேகரன் தாக்கினாராம். இதில் காயமடைந்த சுப்பையசாமி அளித்த புகாரின்பேரில், அப்பையநாயக்கன்பட்டி போலீஸாா், ராஜசேகரன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.