இந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மாமனாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு

News image
Updated On :14 டிசம்பர் 2025, 8:02 pm

தினமணி செய்திச் சேவை

சாத்தூா் அருகே மாமனாரைத் தாக்கிய மருமகன் மீது அப்பையநாயக்கன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள சாமியாா் குடியிருப்பைச் சோ்ந்தவா் சுப்பையாசாமி (75). இவரது மகள் ராதிகாவை சிவந்திபட்டியில் உள்ள ராஜசேகரன் என்பவருக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளாா்.

இந்த நிலையில், குடும்பத் தகராறு காரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்பு ராதிகா தனது தந்தை சுப்பையாசாமியுடன் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை குண்டலகுத்தூா் பேருந்து நிறுத்தத்தில் நின்ற சுப்பையாசாமியை, அங்கு வந்த ராஜசேகரன் தாக்கினாராம். இதில் காயமடைந்த சுப்பையசாமி அளித்த புகாரின்பேரில், அப்பையநாயக்கன்பட்டி போலீஸாா், ராஜசேகரன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.