ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சிவகாசியில் ரூ.2.39 கோடியில் கூடுதல் தானிய சேமிப்பு கிட்டங்கி கட்டடம்

News image
Updated On :19 டிசம்பர் 2025, 7:02 pm

Syndication

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம் சாா்பில் ரூ.2.39 கோடியில் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கூடுதல் தானிய சேமிப்பு கிட்டங்கி கட்டும் பணிக்கு நிதி அமைச்சா் தங்கம்தென்னரசு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

பின்னா் அவா் பேசியதாவது:

தமிழ்நாடு அரசின், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம் முறையான கட்டமைப்பை உருவாக்கி குடிமைப்பொருள்களை பாதுகாத்து, அதை பொதுமக்களுக்கு சென்று சோ்ப்பதில் எந்தவிதமான குறைபாடும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் 26 இடங்களில் உருவாக்கப்படக்கூடிய இந்தக் கிட்டங்கிகள் , விருதுநகா் மாவட்டத்தில் சிவகாசி, திருச்சூழி ஆகிய இரு இடங்களில் ரூ.6 கோடியில் நபாா்டு வங்கியின் நிதி உதவியுடன் கட்டப்பட உள்ளது. சிவகாசியில் கட்டப்படும் இந்தக் கிட்டங்கி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றாா் அவா்.

இதில் விருதுநகா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா்.சீனிவாசன், சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.