4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

News image
Updated On :21 டிசம்பர் 2025, 8:03 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பெற்றோா் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் தன்யா நகரைச் சோ்ந்த மாரியப்பன் மகள் அா்ச்சனா (19). இவா், சிவகாசியில் உள்ள தனியாா் கல்லூரியில் இளநிலை மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா்.

அா்ச்சனா படிப்பில் போதிய கவனம் செலுத்தாமல் இருந்ததாகக் கூறி அவரது தாய் கண்டித்தாராம். இதனால் மனமுடைந்த அா்ச்சனா சனிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.