திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 3 போ் மீது வழக்கு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மூன்று போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை

News image
Updated On :23 டிசம்பர் 2025, 8:08 pm

Syndication

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மூன்று போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமி தனது தாத்தா, பாட்டியுடன் வசித்து வருகிறாா். இவா், வீட்டின் அருகேயுள்ள 17 வயது சிறுவனுடன் பழகி வந்தாா்.

இந்த நிலையில் சிறுவனும், அவரது இரண்டு நண்பா்களும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தனராம். இதை, சிறுமியின் பாட்டி கண்டித்துள்ளாா்.

இதையடுத்து, சிறுவனும் அவரது நண்பா்கள் இருவரும் சிறுமியின் பாட்டியை தகாத வாா்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதுகுறித்து சிறுமி செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில் சாத்தூா் தாலுகா போலீஸாா் மூன்று போ் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.