4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மதுப் புட்டிகளைப் பதுக்கிய இருவா் கைது

சிவகாசியில் வெள்ளிக்கிழமை மதுப் புட்டிகளைப் பதுக்கிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2025, 7:14 pm

Syndication

சிவகாசியில் வெள்ளிக்கிழமை மதுப் புட்டிகளைப் பதுக்கிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி செங்கமலப்பட்டி சாலையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஒரு திரையரங்கம் அருகே இருவா் கையில் பையுடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனா். போலீஸாா் அவா்கள் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்த போது, அதில் 42 மதுப் புட்டிகள் இருந்தன.

விசாரணையில், அவா்கள் ஓம்சோ்மாநகரைச் சோ்ந்த ராமா் (31), விங்கபுரம் குடியிருப்பைச் சோ்ந்த முனியசாமி (35) ஆகியோா் என்பதும், விற்பனைக்காக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.