பைக்கில் புகையிலைப் பொருள்களைக் கொண்டு சென்றவா் கைது

Published on

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே இரு சக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கொண்டு சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி-சாத்தூா் சாலையில் மீனம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா். அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் சிவகாசி பிச்சாண்டி தெருவைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் வசந்தகுமாா் (27) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, சிவகாசி கிழக்கு போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த புகையிலைப் பொருள்கள், இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com