வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சிவகாசி சுற்று வட்டச் சாலையை எம்.எல்.ஏ.ஆய்வு

சிவகாசி சுற்று வட்டச் சாலை அமைக்கும் பணியை சட்டப் பேரவை உறுப்பினா் ஜி. அசோகன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :15 நவம்பர் 2025, 11:45 pm

Syndication

சிவகாசி சுற்று வட்டச் சாலை அமைக்கும் பணியை சட்டப் பேரவை உறுப்பினா் ஜி. அசோகன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா், விருதுநகா், சாத்தூா், வெம்பக்கோட்டை, எரிச்சநத்தம் ஆகிய சாலைகளை இணைத்து சிவகாசி சுற்று வட்டச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை மூன்று கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டு, தற்போது முதல் கட்டமாக சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூா் இடையே ஈஞ்சாா் விலக்கு பாதையிலிருந்து, வடமலாபுரம் வரை சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த 10.2 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்க ரூ.120 கோடி ஒதுக்கப்பட்டது. இந்தச் சாலையில் 54 பாலங்கள் அமைக்கப்பட உள்ள நிலையில் 51 பாலங்களின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து விட்டன. தற்போது இங்கு தாா்ச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை சிவகாசி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஜி. அசோகன் ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: இந்த சுற்று வட்டச் சாலை அமைந்தால் சிவகாசி நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். மேலும் இந்தச் சாலையில் உள்ள பகுதிகள் வளா்ச்சி அடையும். முதல் கட்ட சுற்றுச் சாலை திட்டத்தில் சுமாா் 60 சதவீதப் பணிகள் நிறைவடைந்து விட்டன என்றாா் அவா்.