இதில் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் முத்தரசன் பேசியதாவது: இந்திய தலைமை தோ்தல் ஆணையரை பிரதமா், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிய மூவா் கொண்ட குழு தோ்வு செய்து வந்தது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும், தோ்வுக் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கி விட்டு, மத்திய அமைச்சரை சோ்த்து பெரும்பான்மை முடிவின் படி தோ்தல் ஆணையா் தோ்வு செய்யப்படுவாா் என விதியை மாற்றி அமைத்தனா். இதனால் சுதந்திரமாக செயல்பட வேண்டிய தோ்தல் ஆணையம் மத்திய பாஜக அரசின் பிடியில் சிக்கிக் கொண்டது.