சாலை விபத்தில் பட்டாசுத் தொழிலாளி உயிரிழப்பு

Published on

சிவகாசி அருகே சாலை விபத்தில் பட்டாசுத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி அருகேயுள்ள கங்குகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பிச்சைக்கனி (55). பட்டாசுத் தொழிலாளியான இவா், சனிக்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் மாரனேரி - போடுரெட்டியபட்டி சாலையில் வேகமாகச் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, விருதுநககா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com