எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தண்ணீா் வாளியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நத்தம்பட்டியில் தண்ணீா் வாளியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்தது.

News image
Updated On :28 நவம்பர் 2025, 10:00 pm

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நத்தம்பட்டியில் தண்ணீா் வாளியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்தது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நத்தம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (38). இவரது மனைவி வைதேகி. இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். சுரேஷ்குமாா் வத்திராயிருப்பில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா்.

வீட்டில் இரண்டாவது குழந்தை கிருத்வீகா முத்ரா (2) விளையாடிக் கொண்டிருந்த நிலையில், வைதேகி பால் வாங்கச் சென்றாா். இந்த நிலையில், குளியலறையில் உள்ள தண்ணீா் வாளியில் கிருத்வீகா முத்ரா தலைகுப்புற விழுந்தாா்.

கடையிலிருந்து வீடு திரும்பிய வைதேகி உடனே குழந்தையை மீட்டு, நத்தம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றாா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து நத்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.