கோயில் உண்டியலை உடைத்து பணம், தங்க நகை திருட்டு: 3 போ் கைது

கோயில் உண்டியலை உடைத்து பணம், தங்க நகையை திருடியதாக இளைஞா்கள் மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Updated on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கோயில் உண்டியலை உடைத்து பணம், தங்க நகையை திருடியதாக இளைஞா்கள் மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் தெற்கு மலையடிப்பட்டி சவுந்தர பாண்டியன் நகரில் பூ மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை இரவு பூஜை நிறைவடைந்ததும் கோயிலை பூட்டிவிட்டு பூசாரி சென்று விட்டாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை வந்து பாா்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு பணம், அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகை, வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

தகவலறிந்து அங்கு வந்த ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தினா். மேலும் தடயவியல் நிபுணா்களும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இதனிடையே அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீஸாா் ஆய்வு செய்த போது திருட்டில் ஈடுபட்டது மலையடிப்பட்டி பகுதியைச் சோ்ந்த கருமுருகன் மகன் சுதாகா் (25), மீனாட்சி சுந்தரம் மகன் ஜீவானந்தம் (18), ஜெயச்சந்திரன் மகன் அருண்குமாா் (18) என்பது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com