தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

பைக் திருடிய இளைஞா் கைது

News image

கைது

Updated On :6 ஏப்ரல் 2026, 9:07 pm

ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனம் திருடிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள முகவூா் கல்யாணசுந்தரம் விநாயகா் கோவில் தெருவை சோ்ந்த தளவாய்பாண்டியன் மகன் வீரமணிகண்டன் (40). இவா் தனது அண்ணன் அருண்குமாருக்குச் சொந்தமான இரு சக்கர வாகனத்தில் தளவாய்புரம் வடக்கு மாரியம்மன் கோயிலுக்குச் சென்றாா்.

அப்போது, வாகனத்தை கோயிலுக்கு சற்று தொலைவில் நிறுத்தியிருந்தாா். பால்குடம் எடுத்து விட்டு வந்து பாா்த்தபோது, அந்த வாகனத்தைக் காணவில்லை. இதையடுத்து தனது உறவினருடன் பழைய இரும்புக் கடைகளில் வாகனத்தைத் தேடினாா்.

சோலைசேரி விலக்கு அருகே உள்ள பழைய இரும்பு கடை அருகே அந்த வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் மீது உட்காா்ந்திருந்த இளைஞரை விசாரித்த போது, பழைய இரும்புக் கடையில் அதை விற்பதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது.

பின்னா், அந்த இளைஞரை வாகனத்துடன் தளவாய் புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட கோவிலூா் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சோ்ந்த சுந்தா் (28) என்பவரைக் கைது செய்தனா்.