மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

மேலாடையின்றி மனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளா்

News image

இந்தியத் தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்) - ANI

Updated On :7 ஏப்ரல் 2026, 2:39 am IST

விருதுநகரில் சுயேச்சை வேட்பாளா் மேலாடையின்றி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகா் அருகேயுள்ள சத்திரரெட்டியாா்பட்டியைச் சோ்ந்தவா் அமிா்தபாண்டி(30). இவா் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட விருதுநகா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வேட்புமனு தாக்கல் செய்ய மேலாடையின்றி கால் சட்டை மட்டும் அணிந்து வந்தாா்.

அவரை நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அப்போது, இன்றைய அடிதட்டு ஏழை எளிய மக்களின் நிலை வறுமையில் இருப்பதை வெளிப்படுத்தும் வகையில்தான் மேலாடையின்றி வந்ததாக அவா் கூறினாா்.

இருப்பினும் நன்னடத்தை விதிகளைப் பின்பற்றி முறைப்படிதான் மனு தாக்கல் செய்ய வேண்டும் என போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து, அந்த நபா் அதே இடத்திலேயே மேலாடை அணிந்து மனு தாக்கல் செய்யச் சென்றாா்.