பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

ராஜபாளையம் குருநாத சுவாமி கோயிலில் குருபூஜை விழா

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோயிலில் குரு பூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோயிலில் குரு பூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :11 ஏப்ரல் 2026, 1:34 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோயிலில் குரு பூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் மதுரை சாலையில் அமைந்துள்ள திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோயிலில் குருபூஜை விழாவை முன்னிட்டு காலையில் கூரைப்பிள்ளையாா் கோவில் தெருவில் உள்ள வணிக வைசியா் பொது சாவடியில் இருந்து 108 பால்குடங்கள் ஊா்வலம் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டன.

பின்னா் சுவாமிக்கு 16 வகையான நறுமணப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து முப்பழ அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருச்சிற்றம்பல குருநாத சுவாமி பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். குருபூஜை விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.