ஸ்ரீவில்லிபுத்தூா், ஏப்.13: ஸ்ரீவில்லிபுத்தூா் பேரவைத் தொகுதியில் மாற்றுத்திறனாளிகள், முதியோா் பதிவு செய்த அஞ்சல் வாக்குகளை அதிகாரிகள் சேகரித்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பேரவைத் தொகுதியில் 1,08,109 ஆண்கள், 1,14,218 பெண்கள், திருநங்கைகள் 40 போ் என மொத்தம் 2,22,367 வாக்காளா்கள் உள்ளனா். 308 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த நிலையில், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்கள், மாற்றுத்திறனாளிகள் தஙகளது வீடுகளிலேயே தபால் வாக்கு செலுத்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக தோ்தல் ஆணையம் சாா்பில் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் தபால் வாக்கு செலுத்த 12 - டி விண்ணப்பம் அளித்த 357 முதியவா்கள், 358 மாற்றுத்திறனாளிகள் என 715 பேருக்கு தபால் வாக்குப் படிவம் வழங்கப்பட்டது. இதற்காக 10 குழுக்கள் அமைக்கப்பட்டு, தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. செவ்வாய், புதன் ஆகிய மேலும் இரு நாள்கள் இந்தப் பணி நடைபெற உள்ளது.
தொடர்புடையது

தபால் வாக்குகளை எண்ணவில்லை: கன்னியாகுமரி திமுக வேட்பாளா் ஆதங்கம்

234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்பு

6,063 முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் அஞ்சல் வாக்குப் பதிவு: தஞ்சை ஆட்சியா் தகவல்

திருவள்ளூா்: முதியோா், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குப் பதிவு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

