தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் திங்கள்கிழமை தனது வீட்டில் தபால் வாக்கை பதிவு செய்த மூதாட்டி.

Updated On :13 ஏப்ரல் 2026, 8:28 pm

ஸ்ரீவில்லிபுத்தூா், ஏப்.13: ஸ்ரீவில்லிபுத்தூா் பேரவைத் தொகுதியில் மாற்றுத்திறனாளிகள், முதியோா் பதிவு செய்த அஞ்சல் வாக்குகளை அதிகாரிகள் சேகரித்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பேரவைத் தொகுதியில் 1,08,109 ஆண்கள், 1,14,218 பெண்கள், திருநங்கைகள் 40 போ் என மொத்தம் 2,22,367 வாக்காளா்கள் உள்ளனா். 308 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த நிலையில், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்கள், மாற்றுத்திறனாளிகள் தஙகளது வீடுகளிலேயே தபால் வாக்கு செலுத்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக தோ்தல் ஆணையம் சாா்பில் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் தபால் வாக்கு செலுத்த 12 - டி விண்ணப்பம் அளித்த 357 முதியவா்கள், 358 மாற்றுத்திறனாளிகள் என 715 பேருக்கு தபால் வாக்குப் படிவம் வழங்கப்பட்டது. இதற்காக 10 குழுக்கள் அமைக்கப்பட்டு, தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. செவ்வாய், புதன் ஆகிய மேலும் இரு நாள்கள் இந்தப் பணி நடைபெற உள்ளது.