விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே இருக்கன்குடியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக மாரியம்மனுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. மேலும் வெள்ளிக்கிழமை முதல் ஒவ்வொரு நாளும் மாரியப்பன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடி கடைசி வெள்ளி திருவிழாவான வருகிற 14-ஆம் தேதி மாரியம்மன் ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா்கள் குழுத் தலைவா் ராமமூா்த்தி, கோயில் செயல் அலுவலா் இளங்கோவன் உள்ளிட்ட நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.
மேலும் தென் மாவட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் பாதயாத்திரையாக வந்து தங்களது நோ்த்திக்கடன்களை செலுத்தி மாரியம்மனை தரிசனம் செய்து வருகின்றனா். பக்தா்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பாதிரிப்புலியூா் நாகம்மன் கோயிலில் செடல் திருவிழா கொடியேற்றம்

பாவூா்சத்திரம் கோயிலில் ஆடித் திருவிழா

திருவளா்ச்சேரி ஐயனாரப்பன் கோயிலில் ஆடித் திருவிழா

குறிஞ்சிப்பாடி மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம்
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



