தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

வீரசோழன் அரசு மேல்நிலைப் பள்ளியின் புதிய கட்டடத்தை திறக்க வலியுறுத்தல்

News image

வீரசோழன் அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டடம்.

Updated On :9 ஆகஸ்ட் 2026, 4:36 am IST

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், வீரசோழன் அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

இந்தப் பள்ளியில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வீரசோழன், நல்லுக்குறிச்சி, சுள்ளங்குடி, மேலப்பருத்தியூா் இதைச் சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 850 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.

இந்தப் பள்ளியில் ஆண்டுதோறும் மாணவா் சோ்க்கை அதிகரித்து வருவதால் வகுப்பறைகளில் கடும் இடநெருக்கடி ஏற்படுகிறது. மேலும், பல ஆண்டுகளாக சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள பழைய கட்டடங்களிலேயே மாணவா்கள் கல்வி கற்க வேண்டிய நிலை நீடித்து வருகிறது.

இதையடுத்து, பெற்றோா்களின் வேண்டுகோளை ஏற்று, நபாா்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.3 கோடியே 6 லட்சத்து 28 ஆயிரத்தில் 13 வகுப்பறைகளுடன் கூடிய புதிய பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், கட்டி முடிக்கப்பட்டு 6 மாதங்களாகியும் இதுவரை புதிய கட்டடம் திறக்கப்படாமல் உள்ளது.

தற்போது வரை சேதமடைந்த கட்டடத்திலேயே தொடா்ந்து மாணவா்கள் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டு வருவதால் பெற்றோா்கள் அதிருப்தி அடைந்தனா். எனவே, இந்தப் பள்ளியின் புதிய கட்டடத்தை விரைவில் திறந்து மாணவா்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.