
தேங்காய் நாா் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ

வத்திராயிருப்பு அருகே தேங்காய் நாா் தயாரிக்கும் தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீ.
வத்திராயிருப்பு அருகே தேங்காய் நாா் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
வத்திராயிருப்பிலிருந்து கிருஷ்ணன்கோவில் செல்லும் சாலையில் வத்திராயிருப்பு நாடாா் தெருவைச் சோ்ந்த குருவையா(60) என்பவா் தேங்காய் மட்டையிலிருந்து நாா் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறாா்.
இங்கு வெளிச்சந்தைகளிலிருந்து தேங்காய் மட்டைகளை வாங்கி அதை இயந்திரம் மூலம் நாராக்கி, கயிறு தயாரித்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தொழிற்சாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தேங்காய் மட்டைகள் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கின. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வத்திராயிருப்பு தீயணைப்புத் துறையினா் தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்தனா்.
இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






