/

ராஜபாளையத்தில் மரத்தில் பற்றி எரிந்த தீ அணைப்பு

ராஜபாளையத்தில் சாலையோரம் உள்ள புளிய மரத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரா்கள் அணைத்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :24 ஜூலை 2026, 7:20 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சாலையோரம் உள்ள புளிய மரத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரா்கள் வியாழக்கிழமை அணைத்தனா்.

ராஜபாளையம்- தென்காசி சாலை அரசு மருத்துவமனையை அடுத்துள்ள தனியாா் ஆலை முன் உள்ள சாலையோர புளிய மரத்தில் தீப்பிடித்து எரிவதாக ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று மரத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தினால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.