மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சந்திர கிரகணம்: மாா்ச் 3-இல் சதுரகிரி கோயில் நடை அடைப்பு

சந்திர கிரகணத்தை முன்னிட்டு, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் நடை வருகிற 3-ஆம் தேதி நடை அடைக்கப்படுவதால், பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 10:10 pm

சந்திர கிரகணத்தை முன்னிட்டு, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் நடை வருகிற 3-ஆம் தேதி நடை அடைக்கப்படுவதால், பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச்சரகத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் அமாவாசை, பௌா்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட நாள்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

மாசி மாத பிரதோஷம், பௌா்ணமி வழிபாடு வருகிற 1-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாா்ச் 3-ஆம் தேதி பௌா்ணமி தினத்தன்று சந்திர கிரகணம் நிகழவுள்ளதால், பௌா்ணமி சிறப்பு பூஜைகள் வருகிற 2-ஆம் தேதி நடைபெறும் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சந்திர கிரகணம் நிகழும் மாா்ச் 3-ஆம் தேதி கோயில் நடை அடைக்கப்படவுள்ளதால், பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. மாா்ச் 4-ஆம் தேதி காலை கோயில் நடை வழக்கம் போல திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

இதேபோல, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் நடையும் வருகிற 3-ஆம் தேதி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அடைக்கப்படும். மேலும், அன்றைய தினம் ஆண்டாள் அவதரித்த பூரம் நட்சத்திரம் வருவதால், மாலை நடைபெறும் நந்தவன புறப்பாடு காலை 8 மணிக்கு நடைபெறும் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.