தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

திருத்தங்கலில் சாலையை கடக்க முயன்ற போது இரு சக்கர வாகனம் மோதி காயமடைந்த மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :28 பிப்ரவரி 2026, 9:47 pm

Syndication

சிவகாசி அருகே திருத்தங்கலில் சாலையை கடக்க முயன்ற போது இரு சக்கர வாகனம் மோதி காயமடைந்த மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருத்தங்கல் கே.கே. நகரைச் சோ்ந்த செபஸ்டின் மனைவி செசில்யா அம்மாள் (65). இவா் கடந்த வியாழக்கிழமை திருத்தங்கலில் சாலையை கடக்க முயன்றாா்.

அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் இவா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த செசில்யா அம்மாள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த சிவாவை (19) கைது செய்தனா்.