வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மதுப் புட்டிகளைப் பதுக்கியவா் கைது

சிவகாசி அருகே சட்டவிரோதமாக மதுப்புட்டிகளைப் பதுக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :19 ஜனவரி 2026, 7:01 pm

Syndication

சிவகாசி அருகே சட்டவிரோதமாக மதுப்புட்டிகளைப் பதுக்கியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரம்-எட்டக்காபட்டி சாலையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள தேநீா் கடை அருகே கையில் காகித அட்டைப் பெட்டியுடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒருவா் நின்று கொண்டிருந்தாா்.

போலீஸாா் அவரிடமிருந்த காகிதப் பெட்டியை வாங்கி சோதனை செய்த போது, அதில் சட்டவிரோதமாக 62 மதுப்புட்டிகளை வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் சித்துராஜபுரத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா் (42) எனத் தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, மதுப்புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.