கைது
விருதுநகர்
பட்டாசுகள் பதுக்கியவா் கைது
சிவகாசி அருகே பட்டாசுக் கடையில் சட்டவிரோதமாகப் பட்டாசுகளைப் பதுக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசி அருகே திங்கள்கிழமை பட்டாசுக் கடையில் சட்டவிரோதமாகப் பட்டாசுகளைப் பதுக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசி அருகே பேராபட்டியில் உள்ள ஒரு பட்டாசுக் கடையில் இருப்பு வைக்க அனுமதி பெற்ற்கும் கூடுதலாகப் பட்டாசுகள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.
சோதனையில் உசேன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த லோகேஷ் (74) தனது பட்டாசுக் கடையில் கூடுதலாகப் பல பண்டல் பட்டாசுகளைப் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்த பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ.7.70 லட்சம் ஆகும்.
இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, லோகேஷை கைது செய்தனா்.

