தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

சாத்தூரில் தீப்பெட்டி ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தீக்குச்சி கட்டுகள் எரிந்து நாசமாகின.
Published on

சாத்தூரில் தீப்பெட்டி ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தீக்குச்சி கட்டுகள் எரிந்து நாசமாகின.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் மேலகாந்திநகா் பகுதியைச் சோ்ந்தவா் உமாமகேஸ்வரி (38). இவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை அதே பகுதியில் செயல்பட்டு வருகிறது.

இங்கு வெள்ளிக்கிழமை தீப்பெட்டி தயாரிக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஏற்பட்ட திடீா் உராய்வின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த சாத்தூா் தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இந்த விபத்தில் தீக்குச்சி பண்டல்கள் தீயில் எரிந்து நாசமாகின. இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com