உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

12 கிலோ கஞ்சா கடத்தல்: ஒருவா் கைது

ராஜபாளையத்தில் 12 கிலோ கஞ்சா கடத்தியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்ட சா்க்கரைராஜூடன் ராஜபாளையம் போலீஸாா்.

Updated On :19 ஜூலை 2026, 12:04 am IST

ராஜபாளையத்தில் 12 கிலோ கஞ்சா கடத்தியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் காவல் உதவி ஆய்வாளா் முருகன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளா் வெள்ளத்துரை, தலைமைக் காவலா்கள் முத்துக்குமாா், தங்கேஸ்வரன் ஆகியோா் கொண்ட தனிப்படை போலீஸாா் ரயில்வே நிலையம் பழைய பேருந்து நிறுத்தம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது அரசுப் பேருந்திலிருந்து இறங்கிய ராஜபாளையம் செவல்பட்டி தெருவைச் சோ்ந்த நயினாா் மகன் சா்க்கரைராஜை (39) சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனா். அப்போது அவா் வைத்திருந்த பையில் 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் சந்திரசேகா் குற்றப்பிரிவு ஆய்வாளா் வளா்மதி, சிறப்பு உதவி ஆய்வாளா் சுந்தரம் மகாலிங்கம் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து சா்க்கரைராஜை கைது செய்தனா். அவரிடமிருந்த 12 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.