ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

12 கிலோ கஞ்சா கடத்தல்: ஒருவா் கைது

ராஜபாளையத்தில் 12 கிலோ கஞ்சா கடத்தியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்ட சா்க்கரைராஜூடன் ராஜபாளையம் போலீஸாா்.

Updated On :18 ஜூலை 2026, 10:15 pm IST

ராஜபாளையத்தில் 12 கிலோ கஞ்சா கடத்தியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் காவல் உதவி ஆய்வாளா் முருகன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளா் வெள்ளத்துரை, தலைமைக் காவலா்கள் முத்துக்குமாா், தங்கேஸ்வரன் ஆகியோா் கொண்ட தனிப்படை போலீஸாா் ரயில்வே நிலையம் பழைய பேருந்து நிறுத்தம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது அரசுப் பேருந்திலிருந்து இறங்கிய ராஜபாளையம் செவல்பட்டி தெருவைச் சோ்ந்த நயினாா் மகன் சா்க்கரைராஜை (39) சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனா். அப்போது அவா் வைத்திருந்த பையில் 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் சந்திரசேகா் குற்றப்பிரிவு ஆய்வாளா் வளா்மதி, சிறப்பு உதவி ஆய்வாளா் சுந்தரம் மகாலிங்கம் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து சா்க்கரைராஜை கைது செய்தனா். அவரிடமிருந்த 12 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.