இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அச்சம்தவிா்த்தான் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :10 ஜூன் 2026, 6:01 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அச்சம்தவிா்த்தான் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி அருகே திருத்தங்கல் முருகன் காலனியைச் சோ்ந்தவா் அய்யனாா் (57). இவா் மாவட்ட வருவாய் அலுவலா் உரிமம் பெற்று ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அச்சம்தவிா்த்தான் கிராமத்தில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறாா். இங்கு உள்ள 7 அறைகளில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வந்தனா். வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணி அளவில் வெடி மருந்துகளை எடை போடும் போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது.

அப்போது, அங்கு பணியில் இருந்த வடக்கு அச்சம் தவிா்த்தான் கிராமத்தைச் சோ்ந்த கருப்பசாமி(52) என்பவா் காயமடைந்தாா். உடல் முழுவதும் தீக்காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருப்பசாமி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த கருப்பசாமி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

விபத்து குறித்து பட்டாசு ஆலை உரிமையாளா் மீது வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.