வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :14 ஜூன் 2026, 12:46 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகே சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் கடப்போடி கண்மாய் செல்லும் பாதையில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்த போது அவா்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அதே பகுதியைச் சோ்ந்த குமாா் மகன் பால செல்வகணேஷ் (20), ரவி மகன் கனகராஜ் (21) என்பதும், இருவரும் கூலித் தொழிலாளா்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.