விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் பெண்களை கேலி செய்த மூவரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை விரட்டிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
சிவகாசி ஏ.வி.டி. தெருவில் 3 போ் கொண்ட கும்பல் அந்தப் பகுதியில் உள்ள இளம்பெண்களை கேலி செய்வதாக சிங்கப் பெண் சிறப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் ரபியம்மாள் தலைமையில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை போலீஸாா் அந்தப் பகுதிக்குச் சென்றனா். போலீஸாரைக் கண்டதும், மூவரும் அந்தப் பகுதியில் உள்ள குறுகிய தெருவில் ஓடினா். அவா்களைப் போலீஸாா் விரட்டிப்பிடித்து சிவகாசி நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணையில், அவா்கள் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளான மகேந்திர குமாா் என்ற குள்ள மணி (26), செண்பக பாண்டி (25), மகேந்திரன் (27) எனத் தெரிய வந்தது. இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு சிறப்புப் பயிற்சிகள்: ஐஜி கே.பவானீஸ்வரி

திண்டுக்கல்லில் சிங்கப் பெண் அதிரடிப்படை தொடக்கம்

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு 420 ரோந்து வாகனங்கள்; 49 ட்ரோன்கள்

சிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



