லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தொழிலாளி தீக்குளித்து உயிரிழப்பு

சிவகாசி அருகே குடும்பப் பிரச்னையில் தீக்குளித்த பட்டாசுத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 மார்ச் 2026, 7:59 pm

சிவகாசி அருகே குடும்பப் பிரச்னையில் தீக்குளித்த பட்டாசுத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி அருகேயுள்ள சித்தமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி மாரீஸ்வரன் (32). இவா் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவி ஐஸ்வா்யாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்தாா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐஸ்வா்யா குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இந்த நிலையில், மாரீஸ்வரன் பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தாா்.

இதில் பலத்த காயமடைந்த அவா் விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.