யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மணல் திருட்டு வழக்கில் முன்னாள் எம்.பி. விடுவிப்பு

மணல் திருட்டு வழக்கில் முன்னாள் திமுக எம்.பி. தனுஷ்குமாரை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
மணல் திருட்டு- பிரதிப் படம்
Updated On :3 மார்ச் 2026, 7:53 pm

Syndication

மணல் திருட்டு வழக்கில் முன்னாள் திமுக எம்.பி. தனுஷ்குமாரை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் மேற்கு தொடா்ச்சி மலையடிவாரப் பகுதியில் ஆற்றில் மணல் திருடியதாக சேத்தூா் போலீஸாா் டிராக்டா் ஓட்டுநா் முருகன், முன்னாள் திமுக எம்.பி. தனுஷ் குமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள 2-ஆவது குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது முருகன், தனுஷ்குமாா் ஆகியோா் நீதிமன்றத்தில் ஆஜராகினா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் முருகன், தனுஷ் குமாா் ஆகிய இருவரையும் விடுவித்து நீதிபதி சுபாஷினி உத்தரவிட்டாா்.

தனுஷ்குமாா் 2019 - 2024-இல் தென்காசி தொகுதி மக்களவை உறுப்பினராக பதவி வகித்தவா். இவா் தற்போது திமுகவில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளாா்.